Quantcast
Channel: இது தமிழ்
Viewing all 1647 articles
Browse latest View live

அட்டி – பசங்க கூடுற இடம்

$
0
0

What is Atti?

மா.கா.பா. நாயகனாக ரவுசு விடும் படம்தான் அட்டி. இதில் மா.கா.பா. ஆனந்த் கானா பாடகராகவும், அஜித் ரசிகராகவும் நடித்துள்ளார். 

அட்டி என்றால் என்ன?

பசங்க உட்கார்ந்து அரட்டை அடிப்பதற்கென அனைத்து ஏரியாவிலும் ஓரிடம் இருக்கும். அந்த இடத்திற்குப் பெயர் தான் அட்டி. இது ஒரு பக்கா கமர்ஷியல் படமென்கிறார் அறிமுக இயக்குநர் விஜயபாஸ்கர். இவர் இயக்குநர் சுராஜ் அவர்களிடம் மாப்பிள்ளை, அலெக்ஸ் பாண்டியன் ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

ராம்கி நாயகனாக நடித்த சமயங்களில் கூட, உருவத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே நடிப்பார். அடுத்த படத்திகான கன்ட்டினியூட்டி (Continuity) தவறி விடுமென்பதால், காவல்துறை அதிகாரியாக நடிக்கும் பொழுது கூட தலை முடியைக் கூட வெட்டிக் கொள்ளமாட்டாராம். ஆனால் இப்படத்தில், மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக மீசையை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சென்னையின் மையப்பகுதிகளான காசிமேடு, ராயபுரம், ஐஸ்ஹவுஸ் ஆகிய பகுதிகளில் வசிக்கும் இளைஞர்களின் யதார்த்தமான வாழ்க்கையையும் அன்றாடம் அவர்கள் சந்திக்கும் அனைத்து விஷயங்களையும் சுவாரசியமாக நகைச்சுவையுடன் விவரிக்கும் கதைக்களமே “அட்டி”. கதாநாயகன் தன்னைச் சுற்றி நடக்கும் ஒரு சம்பவத்தைத் தன் நண்பர்கள் உதவியோடு எப்படிக் கையாளுகிறார் என்பதே கதையின் கரு.


அட்டி –டீசர்

எல்லாம் முருகன் செயல் – சுந்தர் சி.பாபு

$
0
0

Sundar C.Babu

இயக்குநர் விஜயபாஸ்கர் சொன்ன கதை தயாரிப்பாளர் கார்த்திகேயனுக்குப் பிடித்து விடுகிறது. இரண்டு வருடங்களாக படமெதுவும் ஒத்துக் கொள்ளாத சுந்தர் சி. பாபுவிடம் கேட்காமலேயே, படத்தின் இசையமைப்பாளர் அவர் தானென இயக்குநர் பெயர் போட்டுக் கொள்கிறார்.

மருத்துவமனையிலிருந்த தன் அம்மாவிடம், “நீங்க வீட்டுக்கு வந்ததும் நான் மீண்டும் இசையமைக்கிறேன்” எனச் சொல்லியுள்ளார் சுந்தர் சி.பாபு. ஆனால் அவரின் அம்மா தவறியதால், கொடுத்த வாக்கைக் காப்பாற்ற படங்கள் எதுவும் ஒத்துக் கொள்ளாமல் இருந்துள்ளார்.

அச்சமயத்தில் தான், ‘அட்டி’ படத்துக்கு இசையமைக்குமாறு அணுகியுள்ளனர். தனது அம்மா தனக்கு மகளாகப் பிறந்துள்ளாரென சுந்தர் சி.பாபு மகிழ்ச்சியில் திளைத்திருந்த நேரமது. தயாரிப்பாளர் பெயரோ கார்த்திகேயன். ஆக, இது முருகனின் விருப்பமென படத்தை இசையமைக்க ஒத்துக் கொண்டுள்ளார் சுந்தர் சி.பாபு.

அதற்கும் மேல், ‘அட்டி’ படத்தை அவரே வாங்கி தனது மகள் பெயரைக் கொண்ட நிறுவனமான ‘பரிநிதா புரொடக்ஷன்ஸ்’ மூலம் வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது, படத்தின் நிச்சய வெற்றிக்கான அறிகுறியென படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை

$
0
0

மாயலோகத்தில்..

நாமக்கல் கவிஞர்கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தமொன்று வருகுது,
சத்தியத்தின் நித்தியத்தை
நம்பும் யாரும் சேருவீர்!

மிகவும் புகழ் பெற்ற இப்பாடலை விடுதலைப் போரில் ஈடுபட்டவர்கள் மிகவும் உற்சாகமாகப் பாடுவார்களாம். இந்த வீரமிக்க பாடலை இயற்றி தேசியக் கவிஞர் என்ற பட்டத்தைப் பெற்றவர் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை அவர்கள்.

கோவை மாவட்டம் மோகனூர் என்கிற கிராமத்தில் 1888 ஆண்டு பிறந்தார். பள்ளியில் படிக்கும்போதே ஓவியம், கவிதை போன்ற கலை வடிவங்களில் நாட்டமுடையவராக இருந்தார். ஆரம்பத்தில் கவிதையைவிட ஓவியம் வரைவதிலேயே அதிக விருப்பமுடையவராக இருந்து அதில் சற்று சம்பாதிக்கவும் செய்திருக்கிறார். கவிபாடும் திறனும் இருந்ததால் டி.கே.எஸ்.சகோதரர்கள் சிறுவர்களாக இருந்தபொழுது, அவர்கள் நடித்து வந்த நாடகங்களுக்குப் பாடல்கள் இயற்றியதாக வரலாற்றுக் குறிப்பு ஒன்று சொல்லுகிறது.

காந்தியின் மீதும், காந்தீயத்தின் மீதும் மிகவும் ஈர்க்கப்பட்டிருந்தார் கவிஞர். காங்கிரஸ் கட்சியின் சில பொறுப்புக்களில் கூட சேலத்திலிருந்து செயல்பட்டிருக்கிறார். ஆனால் வாழ்க்கை அப்போது வளமானதாக இருக்கவில்லை.

சின்ன அண்ணாமலை என்பவர் தமிழ்ப்பண்ணை என்றொரு நூல் வெளியீட்டு நிறுவனம் வைத்திருந்தார். அவர் ஒரு தீவிர காங்கிரஸ்காரர். இந்த வெளியீட்டு நிறுவனத்தின் வாயிலாக கவிஞரின் சில பாடல்களும், புதினங்களும் புத்தக உருவில் வெளி வந்தன.

பாரதியார், வா.வே.சு ஐயர் போன்ற சான்றோர்களின் நட்பு இவருக்குக் கிடைத்திருக்கிறது. இவரது பாடல் ஒன்றைக் கேட்ட பாரதியார் ‘பலே பாண்டியா’ என்று புகழ்ந்திருப்பது சரிந்திரத்தில் ஏற்கனவே பதிவான ஒன்று.

குமாரசாமி ராஜா மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தபொழுது அரசவைக் கவிஞராக இவரை அரசு 1949இல் நியமித்தது. 1956 மற்றும் 1962 ஆகிய ஆண்டுகளில் மேலவைக்குத் தேர்வு செய்யப்பட்டு மேலவை உறுப்பினராகவும் பணியாற்றியிருக்கிறார். சாகித்திய அகாடமியின் நிர்வாகக் குழுவிலும் உறுப்பினராக இருந்திருக்கிறார். 1971 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது இவருக்கு வழங்கப்பட்டது.

1942இல் இவர் எழுதிய புதினம் ‘மலைக்கள்ளன்’ புத்தக உருவில் வெளி வந்தது. இதுவே திரைப்படமாக 1954இல் பட்சி ராஜா பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியை அடைந்தது. வசூலில் சாதனை புரிந்தது. இப்படம் எம்.ஜி.ஆருக்கு ஏராளமான புகழைச் சேர்த்து திரையுலகில் புகழின் உச்சிக்கு எடுத்துச் சென்றது. தமிழ் தவிர இப்படம் இந்தி (ஆசாத்), மலையாளம் (தஸ்கரவீரன்) தெலுங்கு (அக்கிராமுடு), கன்னடம் (பெட்ட கள்ளா), சிங்களம் (சூர சேனா) போன்ற மொழிகளிலும் தயாரிக்கப்பட்டு எல்லா மொழிகளிலும் அமோக வெற்றியைப் பெற்றது.

தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு
அமிழ்தம் அவனுடைய மொழியாகும்
அன்பே அவனுடைய வழியாகும்

என்கிற இவரது பாடல் இப்படத்தில் பயன்படுத்தப்பட்டு பாராட்டுதல்களைப் பெற்றது.

1960இல் வெளிவந்த ‘கடவுளின் குழந்தை’ என்கிற படத்திலும் இவரது பாடல் இடம் பெற்றிருக்கிறது.

இவரது கவிதைத் தொகுப்புகள், புதினங்கள், காப்பியங்கள், நாடகங்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புக்கள், எண்ணிக்கையில் ஏராளம். கலையின் பல்வேறு தளங்களில் இயங்கிய கவிஞர் பெரும் புகழுடன் வாழ்ந்து 1972இல் மறைந்தார்.

- கிருஷ்ணன் வெங்கடாசலம்

காதலும் கடந்து போகும் –ஸ்டில்ஸ்

இறுதிச்சுற்று விமர்சனம்

$
0
0

Irudhi sutru vimarsanam

மீனவப் பெண்ணான மதியின் திறமையைக் கண்டு கொண்டு, அவரைத் தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து பாக்ஸிங் வெற்றியாளராக்க முயற்சி செய்கிறார் கோச் பிரபு செல்வராஜ். அம்முயற்சியில் பிரபு சந்திக்கும் சிக்கல்களும் தடைகளும் தான் படத்தின் கதை.

வாவ்.. 

இயக்குநர் சுதா கோங்கரா அசத்தலான படத்தைக் கொடுத்துள்ளார்.

வேட்டை படத்துக்குப் பிறகு மீண்டும் மேடி தமிழ்ப் படம் பக்கம் திரும்பியுள்ளார். வேட்டை படத்திலிருந்ததை விட இப்படத்தில் இளைஞனாகத் தெரிகிறார் கோச் பிரபு செல்வராஜாக நடித்திருக்கும் மாதவன். ஆனால், படம் முழுவதும் ‘அரைக்கிழம்’ என்றே நாயகியாலும் மற்றவராலும் விளிக்கப்படுகிறார். மிகப் பொறுப்பான கதாபாத்திரத்தில் அற்புதமாகப் பொருந்துகிறார். குத்துச் சண்டை சங்கத்தில் நடக்கும் அரசியலைக் கண்டு கோபுமுறும் பொழுதும், குறிப்பாக ஊழலிலும் நயவஞ்சகத்திலும் ஊறியவர்களை எடுத்தெறிந்து அவமானப்படுத்தும் பொழுதும் கைத்தட்டல்களைப் பெறுகிறார் மாதவன். படத்துக்குள் பார்வையாளர்கள் இழுக்கும் வேலையை மட்டுந்தான் மாதவன் செய்கிறார்.

பின், படத்தைத் தனியொருவராகச் சுமப்பது மதியாக நடித்திருக்கும் ரித்விகா சிங்தான். ரெஃப்ரீயிடம் மதி செய்யும் அமர்க்களத்தால் ஈர்க்கப்படுவது கோச் பிரபு மட்டுமல்ல நாமும் தான். விரக்தியில் அனைவரையும் எடுத்தெறிந்து பேசும் கோச் பிரபு செல்வராஜையே படாதபாடுபடுத்துகிறார்.

படத்திற்காக இரண்டரை வருடம் ஆய்வு மேற்கொண்டதாகச் சொல்லியுள்ளார் இயக்குநர் சுதா. அது இந்தியாவில் தொடங்கப்பட்ட பெண்கள் பாக்ஸிங் பற்றிய ஆய்வு தான் எனினும், படத்தில் சின்னச் சின்ன விஷயங்களிலும் எண்ணற்ற நுண்ணிய விவரணைகளை அழகாக இடம்பெறச் செய்துள்ளார். உதாரணத்திற்கு, சென்னைக்கு மாற்றலாகி வரும் சீனியர் கோச்சுக்கு ஜூனியர் கோச் வைக்கும் பேனர்களும், அதிலுள்ள ஃபோட்டோஷாப் புகைப்படங்களும், வாசகங்களாலும், அதிலுள்ள எழுத்துப் பிழைகளும் (loin/lion) அட்டகாசம். எல்லாவற்றிற்கும் பேனர் வைக்கும் தமிழர் மரபை செம்மையாக பகடி செய்துள்ளார். இரண்டு மணி நேரத்துக்கும் குறைவான படத்தில், அவ்வளவு விஷயங்களைக் கச்சிதமாகச் செதுக்கியுள்ளார். ஆம், ரஷ்யாவின் ஹெவி வெயிட் சேம்பியனான நடாலியா எப்படி லெஸ் வெயிட் சேம்பியன்ஷிப்பில் பங்கேற்கிறார் என்ற சூசகம் முதல் அனைத்தையும் மிகக் கவனத்துடன் கையாண்டுள்ளார்.

நாயகியின் தந்தை சாமிக்கண்ணுவாக காளி வெங்கட். குடிக்காக சாமுவேலுவாக மாறி மனைவியிடம் அடி வாங்குவது முதல், வேண்டாத மகள் போட்டியில் வென்றதும் மனைவியின் காலில் விழும் வரை அசத்துகிறார். அவரது மனைவியாக நடித்திருப்பவரும் நெகிழ வைக்கிறார். சென்னை பாஷை பேசி ஜூனியர் கோச்சாக வரும் நாசர் வழக்கம் போல் அசரடிக்கிறார். நாசரும் ராதாரவியும் பேசிக் கொள்ளும் காட்சியும், அதனைத் தொடர்ந்து வரும் காட்சியில் மகிழ்ச்சியோடு கண்கள் கலங்க ராதாரவி விளையாட்டரங்கின் இருக்கையில் சாய்வதும் படத்திற்கு அழகான அர்த்தத்தை ஏற்படுத்துகிறது.

மதியின் அக்கா லக்ஸ் எனும் லட்சுமியாக நடித்திருக்கும் மும்தாஜ் தனது பங்கினை அழகாகச் செய்துள்ளார். கோச், தங்கைக்குத் தரும் முக்கியத்துவத்தாலும் முன்னுரிமையாலும் மனம் சுணங்கும் லக்ஸின் ஆதங்கத்தை மிக இயல்பாய் தன் நடிப்பில் கொண்டு வந்துள்ளார். ஹெட் கோச்சாக நடித்திருக்கும் ஜாகிர் ஹூசைனின் அலட்டலற்ற வில்லத்தனம், புரையோடி இருக்கும் சமூகத்தின் மீதான பயத்தை அதிகரிக்கச் செய்கிறது. ‘நீ ஜெயிக்கணும்னா நாக்-அவுட் தான் ஒரே வழி. இல்லைன்னா அசோசியேஷன் அரசியலில் உன்னைத் தோற்கடிச்சுடுவாங்க’ எனும் வசனம் தாங்கி வரும் வலியும், அருவருப்பான உண்மையும் அதற்கொரு எடுத்துக்காட்டு. படத்தின் கலகலப்பிற்கும் வசனங்கள் உத்திரவாதமளிக்கின்றது.

இயக்குநர் மணிரத்னத்திடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் சுதா. பாடல்களின் மாண்டேஜ் ஷாட்ஸ்களைக் கொண்டே அதை ஊர்ஜிதம் செய்து கொள்ளலாம். உதாரணத்திற்கு, தர்மசாலாவில் புத்தக பிக்குகளுக்கு முன் நடந்து வரும் நாயகி, கொக்கியில் மாட்டி மீனைக் கொண்டு வரும் ஒரு ஷாட்டைச் சொல்லலாம். சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை காட்சிகளை நெருக்கமாக உள்வாங்க உதவுகிறது.

இறுதிச்சுற்றுகிரிக்கெட் மீதான குவிமைய மோகத்திலிருந்து மீள இது போன்று இன்னும் பல சுற்றுகள் தேவைப்படுகிறது.

நாலுபேரு நாலுவிதமா பேசுவாங்க விமர்சனம்

$
0
0

Naalu Peru Naalu Vithama Pesuvanga Vimarsanam

நான்கு பேர் நான்கு விதமாகப் பேசுவார்களே என்ற தயக்கத்தாலேயே சிலர் எக்காரியத்தையும் முயற்சி செய்ய மாட்டார்கள். ஆனால், இயக்குநர் L.மாதவனுக்கு அப்படி எந்தத் தயக்கமும் இல்லை என்பது மட்டும் திண்ணம். மிகத் தைரியமாகஒரு ‘குறி’ப்பிட்ட அவஸ்தையைப் படமாக்கியுள்ளார். .

அழுக்கனுக்கு அஞ்சு பணம் செலவு என்பார்கள். அப்படித்தான் செலவினத்தைக் குறைக்க நினைக்கும் சரவணனும், அதனாலேயே ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறான். அதிலிருந்து மீண்டு அவன் விரும்பிய பெண்ணை மணந்து கொள்கிறானா இல்லையா என்பது தான் படத்தின் கதை.

படத்தின் திரைக்கதை, நம்மை 25 ஆண்டுகளுக்கு முன் கொண்டு சென்று விடுகிறது என்றால் அது மிகையில்லை. உலகத்தின் வேகத்தோடு ஓடாமல், அதை எதிர்த்து பழைமை வழுவக் கூடாதென எதிர் நீச்சல் போட மிகச் சிலராலேயே இயலும். எழுதித் தயாரித்து இயக்கியுள்ள L.மாதவன் அத்தகையவரே!

பழைய பாணி படமென்பதால், நாயகன் இந்திரஜித்துக்கும் நாயகி தேவிகா மாதவனுக்கும் கோயிலில் முதல்முறை பார்க்கும் பொழுதே காதல் வந்து விட்டதென நினைக்க வேண்டாம். அங்கே தான் ஒரு ட்விஸ்ட் வைத்துள்ளார் இயக்குநர். ஆம், நிதானமாக இரண்டாம் முறை பார்க்கும் பொழுது தான் சட்டென காதல் மலர்கிறது. இப்படிப் படத்தில் ஏகப்பட்ட சுவாரசியங்கள் (!?).

‘கல்கோனா கண்ணழகி.. கற்கண்டு சொல்லழகி’ என்று யுகபாரதியின் வரிகளில் தொடங்கும் பாடல் துள்ளலாய் உள்ளது. அப்பாடலில், இசையமைப்பாளர் A.K.ரிஷால் சாய், ஒளியமைப்பாளர் D.S.வாசன், கலை இயக்குநர் ராகவாகுமார் ஆகியோர் ஒருவரையொருவர் முந்திக் கொள்ளப் பார்க்கின்றனர். ‘நாலு.. பேரு.. நாலு விதமா.. பேசுவாங்க’ என்று தலைப்பு போடும் பொழுது வரும் ராகமும் குரலும் ஈர்க்கிறது.

‘ஸ்ரீ கிருஷ்ணா டாக்கீஸ்’ எனும் தயாரிப்பு நிறுவன லோகோ வரும் அனிமேஷன் மிக அற்புதமாய் உள்ளது. கிருஷ்ணர் மந்தகாசமாய் நடந்து, தொங்கிக் கொண்டிருக்கும் வெண்ணைக் குடங்களை நோக்கி அசால்ட்டாய் துப்பாக்கியால் சுடுகிறார். சிதறும் வெண்ணெயில் நிறுவனப் பெயர் போடுகின்றனர். வாவ்..

சிங்கமுத்து, லொள்ளு சபா சுவாமிநாதன், சிவசங்கர் மாஸ்டர் என நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்துள்ளார் இயக்குநர். படத்தில் சில அபார நகைச்சுவைக் காட்சிகள் உண்டு. உதாரணத்திற்கு, ஃபோனில் பேசி மட்டுமே காதலிக்கும் பெண்ணை முதல் முறையாக நாயகன் பார்க்கிறார்; அந்தப் பெண் குண்டாக இருக்கிறார் (உருவத்தை கேலி செய்வது காமெடியில்தானே வருது!?); தான் வஞ்சிக்கப்பட்டு விட்டதாகக் கடுப்பாகும் நாயகன் உடனே டாஸ்மாக்கிற்கு ஓடி, ‘நல்ல பொம்பள எவளுமிங்கு இல்லவே இல்ல’ என ஃபீல் செய்து ஒல்லியான பெண்களுடன் சேர்ந்து ஆடுகிறார். 

இப்படியாக முழுப் படமுமே ஒரே அறுச்சுவை தமாஷ்தான்.

ஆர்ய மாலா (1941)

$
0
0

(முக்கிய நடிகர்கள்: பி.யு.சின்னப்பா, என்.எஸ்.கிருஷ்ணன்; டி.எஸ்.பாலையா; எம்.எஸ்.சரோஜினி; டி.ஏ.மதுரம்; எம்.ஆர்.சந்தானலட்சுமி)

ஆர்ய மாலா (1941)

1940-களில் தொடர்ந்து படங்களை உருவாக்கி வந்த மிகச்சிறந்த சினிமா தயாரிப்பு நிறுவனங்களான சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ், ஜெமினி, ஏவி.எம்., ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனங்களுக்கு நிகராகப் பேசப்பட்ட மற்றொரு சினிமா படத்தயாரிப்பு நிறுவனம் கோயம்புத்தூரிலிருந்து இயங்கி வந்த பக்ஷிராஜா ஸ்டுடியோஸ் என்கிற நிறுவனம். ஆரம்பத்தில் இதன் உரிமையாளர்கள் எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு என்பவரும் சேலம் நாராயண அய்யங்கார் என்பவரும் ஆவர்.

Old film posterஇந்த நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளாக சிவகவி (1943), ஜகதலப்பிரதாபன் (1944), கன்னிகா (1947), ஏழைபடும்பாடு (1950), மலைக்கள்ளன் (1954) மற்றும் மரகதம் (1959) போன்ற படங்களுக்கெல்லாம் முன்னோடியாக இந்நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் ‘ஆர்ய மாலா’. இது ஒரு மாபெரும் வெற்றிப்படம். இப்படத்தை இயக்கியவர் எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு.

நாட்டார் தெய்வமாகக் கருதப்படும் ‘காத்தவராயன்’ கதை தான் ஆர்யமாலா திரைப்படம்.

முன்பு ஒருமுறை கணவனான சிவபெருமானை நிந்தித்த பாவம் தீர வழி தேடுகிறார் பார்வதி தேவி. பூலோகத்தில் ஒரு பூந்தோட்டம் அமைத்து தன்னை பூஜை செய்து வந்தால் பாவங்கள் நீங்கும் என சிவபெருமான் கூற, பார்வதி தேவி அருமையான பூந்தோட்டம் ஒன்றை அமைக்கிறார்.

அழகான அப்பூந்தோட்டத்தைப் பாதுகாக்க ஒரு மகனை உருவாக்குகிறார் சிவபெருமான். அப்பிள்ளைதான் காத்தவராயன். இப்பிள்ளையை சிவபெருமானின் மூன்றாவது மகன் என்றும் அழைப்பார்கள்.

தேவலோகத்தைச் சேர்ந்த இளங்கன்னி எனும் ஒரு பெண் தன் தோழிகளுடன் பூலோகம் வருகிறாள். இவள் ஒருநாள் ஆற்றில் குளிக்கையில் அங்கு வந்த காத்தவராயன் அந்தப் பெண்ணின் அழகினால் கவரப்பட்டு, அவளை அடைய ஆசைப்படுகிறான். அவளது தெய்வீகமான சேலையை எடுத்துச் சென்று விடுகிறான். அப்பெண்ணினால் ஆற்றிலிருந்து வெளியே வரமுடியாத நிலை.

இளங்கன்னியின் தோழிகள் சிவபெருமானிடம் சென்று முறையிடுகிறார்கள். அவர் கோபமடைகிறார். இதற்கிடையில் ஆற்றில் இறங்கி இளங்கன்னியின் அருகில் செல்ல முற்படுகிறான் காத்தவராயன். ஆனால் அப்பெண் ஆற்றின் போக்கில் சென்று தன்னை மாய்த்துக் கொள்கிறாள்.

அப்போது அங்கு வந்து சேர்ந்த சிவபெருமான் காத்தவராயனுக்கு சாபமிடுகிறார். பல பிறவிகள் பூமியில் பிறந்து காமலோலனாக அலைந்து, அவதிப்பட்டு முடிவில் தற்கொலை செய்து கொண்ட பெண் மூலமே அவனுக்கு முடிவு ஏற்படும் எனக் கூற, பார்வதி தேவி தன் மகனுக்காக பரமசிவனிடம் வாதாடுகிறார். இருவருக்கும் தகராறு ஏற்பட, பார்வதி தேவியும் பூலோகத்திலேயே தங்கிவிட சாபமிடுகிறார் சிவபெருமான்.

தவறை உணர்ந்த பார்வதி தேவி, சாப விமோசனம் கேட்க, பம்பா நதிக்கரையில் தவமிருந்து தன்னை பூஜித்து சாப விமோசனம் பெற அருள் புரிந்து மறைந்து விடுகிறார்.

காத்தவராயன் பரதேசி கோலத்தில் அலைகிறான். ஒருநாள் விநாயகர் சந்நிதியில் வந்து உருக்கமாகப் பாட, விநாயகர் தோன்றி, காத்தவராயனை சிறு குழந்தையாக மாற்றி, அக்குழந்தையை, பூஜை செய்து வந்த பார்வதி தேவியின் அருகில் விட்டுச் சென்று விடுகிறார். குழந்தையைக் கண்டெடுத்த பார்வதி தேவி அக்குழந்தையை காட்டுவாசிகளிடம் ஒப்படைத்து, அவர்களுடனேயே வளர்க்கச் செய்கிறாள். அக்குழந்தை வளர்ந்து காத்தவராயனாக, எல்லாக் கலைகளிலுமே தேர்ச்சி பெற்று விடுகிறான்.

ஒரு நாட்டின் மந்திரி தனக்குக் குழந்தை வேண்டுமென்பதற்காக மகாவிஷ்ணுவிற்கு பூஜை செய்து அர்ச்சிக்க, அவரது அருளால் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. பிராமண குலத்தில் பிறந்த அக்குழந்தை தான் ஆர்யமாலா.

நன்கு வாலிபனாக வளர்ந்துவிட்ட காத்தவராயன் பம்பா நதியோரம் சென்று தன் தாயை வழிபடுகிறான். மகிழ்ச்சியடைந்த அவனது தாயார், உலக அனுபவம் பெற காத்தவராயனை பல நாடுகளுக்குச் சென்று அனுபவம் பெற்று வர கட்டளையிடுகிறார்.

மலையாள நாட்டில் பல மந்திர, தந்திரங்களைச் செய்கிறான் காத்தவராயன். அங்கிருந்தவர்கள் அவனை ஒப்புக் கொள்ளாமல், தங்களது நாட்டு மந்திரவாதியுடன் போட்டியிட்டு, அவன் வைக்கும் மோடியை எடுக்க வேண்டும் எனவும் கூறுகிறார்கள்.

மலையாள நாட்டின் மந்திரவாதியுடன் நடந்த போட்டியில் முதலில் பல இன்னல்களை அடைந்தாலும், முடிவில் மோடி எடுத்து காத்தவராயன் வெற்றிபெறுகிறான். அத்துடன் அந்த மந்திரவாதியையும் தனது அடிமையாக்கிக் கொள்கிறான்.

இருவரும் பார்வதி தேவியிடம் செல்ல, அவர் எவரும் எவருக்கும் அடிமையில்லை எனக் கூற, இருவரும் நண்பர்களாக மாறுகிறார்கள்.

ஒரு சமயம் மன்னர் தன் பரிவாரங்களுடன் வேட்டையாட காட்டிற்கு வரும் போது அவருடன் மந்திரியும், அவருடைய மகளான ஆர்யமாலாவும் வருகிறார்கள். அந்தக் காட்டில் மானைப் பிடிக்க வலை வீசுகிறார்கள் காத்தவராயனும் அவனது மந்திரவாதி நண்பனும். அதில் மாட்டிக் கொள்கிறாள் ஆர்யமாலா. அதிலிருந்து அவளை விடுவிக்கிறான் காத்தவராயன். ஆர்யமாலாவை விரும்ப ஆரம்பிக்கிறான். ஆனால் அவள் யாரென்பது காத்தவராயனுக்குத் தெரியவில்லை.

வெற்றிலையில் மை போட்டுப் பார்த்து, அவள் ஆர்யமாலா என்றும், அவளை அடைவது மிகவும் கடினம் எனவும் மாந்திரீக நண்பன் கூறுகிறான்.

ஆர்யமாலாவை அடைய பல திட்டங்கள் தீட்டுகிறான் காத்தவராயன். கிழவன் வேஷத்தில் ஒரு மரத்தின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு ஆர்யமாலா காதில் விழும்படியாகப் பாடுகிறான். அங்கு வந்த ஆர்யமாலாவின் தோழிகளை படாதபாடு படுத்துகிறான். அவர்கள் மந்திரியிடம் சென்று புகார் செய்கிறார்கள். ஆட்களுடன் வந்த அவரையும் விரட்டி அடித்து விடுகிறான். மந்திரி அரசரிடம் சென்று முறையிடுகிறார். அவர் தனது சேனாதிபதியை அனுப்பி காத்தவராயனைப் பிடித்து வரும்படி கட்டளையிடுகிறார். சேனாதிபதி படைவீரர்களுடன் சென்று சண்டையிட்டு தோல்வி அடைகிறான். ஆனால் தந்திரமாக அவனைப் பின் தொடர்ந்து சென்று, ஒரு சாக்குப்பைக்குள் அடைத்து அரசர் முன் கொண்டு வந்து விடுகிறார்கள்.

அரசர் முன் சாக்கு மூட்டையை அவிழ்க்க, கிழவனுக்கு பதில் உள்ளே இருந்து இளைஞனான ஒரு ஜோதிடன் வெளிப்படுகிறான். காத்தவராயன் இம்மாதிரியாக இப்படத்தில் பல்வேறு வேஷங்களில் தோன்றுகிறான். இவற்றிலெல்லாம் பி.யு.சின்னப்பா காத்தவராயனாக மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

வண்ணானாக, வளையல் வியாபாரியாக, அரண்மனை வீரனாக, பண்டாரமாகப் பல வேஷங்களில் பி.யு.சின்னப்பா அக்காலத்தில் நடித்து, திரை ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.

அது போலவே மலையாள மாந்திரீகனாக நடித்த என்.எஸ். கிருஷ்ணனிடமிருந்தும் சிறப்பான நடிப்பு வெளிப்பட்டது. இப்படத்தில் இவர் அடிக்கடி பேசும் ‘ஐயோடா’ வசனம் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. ஆச்சரியமான எந்த விஷயத்திற்கும் ‘ஐயோடா’ என்பார். இந்த ‘ஐயோடா’ வசனம் சமீபத்தில் சின்னத்திரை தொடர் ஒன்றில் பயன்படுத்தப்பட்டு, அதுவும் ரசிக்கப்பட்டது. நமது முன்னோடிகள் ஏற்கெனவே விட்டுச் சென்றதை கையிலெடுத்தும் புதுப்பித்து, ஏதோ புதியது போல் இன்றைய ரசிகர்கள் மீது விட்டெறிந்து, தங்களது புதிய திறமையை வெளிப்படுத்திக் கொண்டார்கள்!

காத்தவராயன் தனது மாமனான மஹாவிஷ்ணுவின் துணையுடன் மாறு வேஷத்தில் வளையல் வியாபாரியாக வந்து அனைவரையும் மயக்கமடையச் செய்து, மயங்கிய நிலையிலிருந்த ஆர்யமாலாவுக்குத் தாலிக்கட்டி விட்டுப் போய் விடுகிறான்.

மயக்கம் தெளிந்து எழுந்த ஆர்யமாலா, வந்தது காத்தவராயன் என அறியாமல் வேறு எவரோ என நினைத்து, வருந்தி, தன்னை மாய்த்துக் கொள்வதற்காக கடலை நோக்கி ஓடுகிறாள். மகாவிஷ்ணுவின் அருளால் பிறந்த அவளை, மகாவிஷ்ணு ஒரு கற்சிலையாக மாற்றி விடுவார். அனைவரும் அழுது, புலம்பி, பரிதவிக்கின்றனர். அங்கு வந்த காத்தவராயனின் ஸ்பரிசத்தால், சுய உருவை அடைகிறாள் ஆர்யமாலா. அவளைத் தனது இருப்படத்திற்குக் கொண்டு சென்று விடுகிறான் காத்தவராயன்.

தனியாக ஒருநாள் வந்து கொண்டிருந்த காத்தவராயனை தனது ஆட்களுடன் மறைந்திருந்த சேனாதிபதி பிடித்து, சங்கிலியில் பிணைத்து அரசர் முன் இழுத்து வந்து விடுகிறான். சேனாதிபதியாக, மிக மெலிந்த உருவத்தில் நடித்த டி.எஸ்.பாலையா பார்ப்பதற்கு அழகாகத் தானிருந்தார்.

காத்தவராயனின் செய்கைக்காக, அவனை கழுவிலேற்ற உத்தரவிடுகிறார் அரசர். கழு மரத்தின் முன்னே நின்று காளியை நினைத்து உருக்கமாகப் பாடுகிறான் காத்தவராயன்.

மகாவிஷ்ணு, சிவனை இழுத்துக் கொண்டு காத்தவராயனை கழுவிலேற்றும் இடத்திற்கு வருகிறார். சரியான நேரத்தில் வந்த சிவபெருமான் கழுவைக்காணாமல் செய்து விடுகிறார். அனைவருக்கும் ஆசி வழங்கி, பார்வதி தேவியுடன் கைலாசம் சென்றுவிடுகிறார். காத்தவராயன், ஆர்யமாலா திருமணம் இனிதே நடைபெறுகிறது. ஓம்!

Sree Ramalu Naiduஆர்யமாலா படத்தின் கதாநாயகன் பி.யு.சின்னப்பா, இவர் அப்போது மிகவும் பிரபலமாக விளங்கிய தமிழ்ப்பட ஹீரோக்களில் ஒருவர். மற்றொருவர் எம்.கே.தியாகராஜ பாகவதர். 1936 இல் வெளிவந்த சந்திரகாந்தா, 1938 இல் வெளிவந்த ‘யயாதி’, 1940 இல் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த ‘உத்தமபுத்திரன்’ படங்களுக்குப் பிறகு ‘ஆர்யமாலா’ படம் பி.யு.சின்னப்பாவிற்கு அதீதப் புகழை ஏற்படுத்திய படம். நடிக்கவே தெரியாதவர்கள் நடிகர்களாக வலம் வந்த காலத்தில் நன்கு நடிக்கத் தெரிந்த நடிகராக விளங்கியவர் பி.யு.சின்னப்பா.

இந்தப் படத்தில் கதாநாயகி எம்.எஸ்.சரோஜினி என்பவர். இவரை இப்படத்தின் உரிமையாளர் எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு பின்னாளில் திருமணம் செய்து கொண்டார்.

இப்படத்தின் இசையமைப்பாளர் அப்போது முன்னுக்கு வந்து கொண்டிருந்த ஜி.ராமனாதன். ‘சிவ கிருபையால் புவி மேல் மாதா உன்னை, தெரிந்துள்ளமே மகிழ்ந்தேன்’ என சரஸ்வதி ராகத்தில் பி.யு.சின்னப்பா பாடிய பாட்டு மெத்த பிரபலமடைந்தது. இப்பாடல் தவிர மற்ற பாடல்கள் அப்படியொன்றும் சிறப்பாக அமைந்து விடவில்லை.

ஒளிப்பதிவை அருமையாகச் செய்திருந்தார் பொம்மன் இரானி என்கிற வடநாட்டைச் சார்ந்தவர்.

Kaathavarayan 1958 Movie Stillஇதே ஆர்யமாலா கதையை 1958 இல் ‘காத்தவராயன்’ என்கிற பெயரில் திரைப்படமாக மீண்டும் தயாரித்தார்கள் வெறொரு நிறுவனத்தார். டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் உருவான இப்படத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி ஜோடியாக நடித்திருந்தனர். கதையை நம்பினார்களா! அல்லது சதையை நம்பினார்களா?! எனத் தெரியவில்லை. மிகவும் கனமான நடிகர்களான சிவாஜி கணேசனும், சாவித்திரியும் நடித்தும், இப்படம் ஆர்யமாலாவைப் போல் வசூலில் வெற்றி பெறவில்லை. இவர்கள் இருவரது கனத்தையும் தாங்க இயலாமல் இப்படம் எழுந்திருக்கவில்லை என அப்போது பலரும் வேடிக்கையாகக் குறிப்பிட்டார்கள்.

உண்மையில் பக்ஷிராஜாவின் ‘ஆர்யமாலா’வை விட சிறப்பாக எடுக்கப்பட்ட படம் காத்தவராயன். ஆர்யமாலாவிற்கு இசையமைத்த அதே ஜி.ராமனாதன் தான் காத்தவராயனுக்கும் இசையமைத்திருந்தார். இப்படத்தில் பல பாடல்கள் ‘ஹிட்’ ஆயின. சிவாஜியும், சாவித்திரியும் சிறப்பாகவே நடித்திருந்தனர். ஆனாலும் படம் வெற்றி பெறாமல் போனதற்கு, தமிழ்த் திரைப்பட ரசிகனின் ரசனையில் ஏற்பட்ட மாற்றம் தான் காரணம் எனக் கருதவும் இடமுண்டு.

காத்தவராயன் பிறப்பால் சிவபெருமானின் மகன் என்றாலும், தாழ்ந்த குடியைச் சேர்ந்த காட்டுவாசிகளால் அவர்கள் மத்தியிலேயே வளர்க்கப்பட்டதால் அவன் ஒரு தாழ்ந்த குலத்தவனாகவே கருதப்பட்டான். பிராமண குலத்தில் பிறந்தவள் ஆர்யமாலா. தாழ்ந்த, உயர் ஜாதி திருமணம் வாயிலாக ஜாதி உணர்வைக் களையும் விதமாகவும் இக்கதையைத் தேர்ந்தெடுத்து, சமூகத்துக்குப் பயனுள்ள செய்தியை இப்படத்தின் வாயிலாக நேர்த்தியாகச் சொல்லியிருந்தார்கள் பக்ஷிராஜா ஸ்டுடியோஸ் நிறுவனத்தினர். சிறப்பான இப்படம் மிகப்பெரிய படம். மூன்று மணி நாற்பத்தியேழு நிமிடங்கள். ஆனால் அலுப்பே தட்டாமல் படத்தைப் பார்க்க முடிவது இப்படத்தின் சிறப்பை உணர்த்தும். பாராட்டுதல்களுக்குரிய படம்.

- கிருஷ்ணன் வெங்கடாசலம்


அரண்மனை 2 விமர்சனம்

$
0
0

Aranmanai 2 Tamil review

நாயகனின் பெயரைக் கூட மாற்றாமல் முரளி என்றே வைத்து, மிக மிகச் சின்னஞ்சிறு மாற்றங்களுடன் அரண்மனையையே அரண்மனை-2 ஆக்கி விட்டுள்ளார் சுந்தர்.சி.

முரளியின் வீட்டில் அமானுஷ்யனான சம்பவங்கள் நிகழ்கின்றன. தனது மாமன் மகன் ரவியின் உதவியுடன் அதிலிருந்து எப்படி மீள்கிறான் என்பதுதான் படத்தின் கதை.

முந்தைய அரண்மனையை விட, இப்படம் சகல விதத்திலும் சிறப்பாய் உள்ளது. ஆனால், அதே திரைக்கதை என்பதால் பார்த்த படத்தையே பார்க்கும் அசுவாரசியத்தை ஏற்படுத்துகிறது.

பழி வாங்க நினைக்கும் மாயா ஏன் இறக்கிறாள் என்ற கிளைக் கதை அச்சமூட்டுகிறது. அக்காட்சிகளில் ராதா ரவியின் நடிப்பும் அனுபவமும் அற்புதமாய் வெளிபட்டுள்ளது. கெளரவக் கொலைகளை முற்றிலுமாக இம்மண்ணிலிருந்து ஒழிக்க மாயா போல் நான்கு பேய்கள் நிஜமாகவே உலாவினால் உண்மையிலேயே நன்றாகத்தான் இருக்கும். ஹன்சிகா முகத்தில் இன்னும் கோபம் காட்டியிருக்கலாம்.

சித்தார்த் ஆச்சரியப்படுத்துகிறார். பேய்களும் பெண்களும் ஆட்சி செய்யும் திரையில் தனக்கென்றொரு முக்கியத்துவம் இருக்காதெனத் தெரிந்தும், துணிந்து அக்கதாபாத்திரத்தை ஏற்று முடிந்த மட்டும் தன்னிருப்பைக் காட்ட முயன்றுள்ளார். பாடல் காட்சிகளில் த்ரிஷாவை விட அதிக ஸ்கோப் இவருக்குத் தானெனினும் தன் உடை அலங்காரத்தால் த்ரிஷா அதையும் காலி செய்து விடுகிறார்.

சூரிக்கு ஜோடியாக்கிவிட்டனர் கோவை சரளாவை. சூரி – திண்டுக்கல் சரவணன் இணை சிரிப்பை வர வைத்தாலும், சூரி – கோவை சரளா இணை ஏமாற்றமே அளிக்கின்றனர். ராய் லட்சுமிக்குப் பதிலாக பூனம் பஜ்வாவை களமிறக்கினாலும், அவரொரு கேரளப் பதுமை போல் வந்து போகிறார். இறுதியில் மூன்று கதாநாயகிகளையும் ஒரு பாடலுக்கு ஆட வைத்து அக்குறையைப் போக்கி விடுகிறார். நம்பூதிரியாக நடித்திருக்கும் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனின் ஆகிருதி கதாபாத்திரத்துக்குப் பொருந்த வைக்கிறது.

படத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸும், ஒளிப்பதிவும் மிரட்டியுள்ளது. படத்தின் உண்மையான நாயகன் ஒளிப்பதிவாளர் U.K.செந்தில் குமார் தான். படத்தின் இன்னொரு நாயகன் கலை இயக்குநர் குரு ராஜ். படத்திற்காக பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட 103 அடி பிரம்மாண்ட அம்மன் சிலையை திரையில் கண்டு பிரமிக்காமல் இருக்கவே முடியாது. எனினும் யூகிக்க முடிந்த திரைக்கதை படத்தைச் சோபிக்க விடாமல் செய்து விடுகிறது.

Amman statue

நடிகை அருந்ததியின் அர்த்தநாரி

$
0
0

Arundhathi Arthanaari

அருந்ததி அதிரடியாக அசத்தும் புதிய படம் அர்த்தநாரி. இந்தப் படத்தை இயக்கியுள்ளவர் சுந்தர இளங்கோவன். இயக்குநர் பாலாவிடம் அசோசியேட் இயக்குநராகப் பணியாற்றியவர் இவர்.

அர்த்தநாரி படத்தைப் பற்றி உற்சாகமாகப் பேசும் அருந்ததி, “அர்த்தநாரி படம் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் அமைந்த ஒரு முழுமையான ஆக்க்ஷன் படம். அந்த உண்மைச் சம்பவங்கள் எனக்குப் பர்சனலாகவே மிகவும் உத்வேகம் அளித்தன” என்கிறார். அவர் ‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘தொட்டால் தொடரும்’ முதலிய படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“இதில் நான் சவால்கள் நிறைந்த ஒரு அண்டர் கவர் போலிஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இது வழக்கமான அண்டர் கவர் அதிகாரி கேரக்டர் அல்ல. மிகக் கஷ்டமான ஒன்று. இந்தக் கேரக்டருக்காக நான் நிறையவே ஹோம் வொர்க் செய்து என்னை முழுமையாகத் தயார் செய்து கொண்டேன்.

துப்பாக்கியைப் எப்படி பிடிப்பது? ட்ரிக்கரை எப்படி அழுத்துவது என்பது வரை எல்லாமும் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு போலிஸ் அதிகாரியிடம் இரண்டு வாரம் பயிற்சி எடுத்துக் கொண்டேன்.

சண்டைக்காட்சிகளில் ஒரு நிஜ போலிஸ் வீராங்கனை போலவே குதிப்பது, உதைப்பது எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்பதற்காக சண்டைப் பயிற்சியும் எடுத்துக் கொண்டேன். அவை எல்லாம் மிகச் சிரமமாக இருந்தாலும் சுவாரசியமாகவும் இருந்தது.

இந்தப் படத்திற்காகச் சண்டைக் காட்சிகளில் மட்டுமின்றி, நடனக் காட்சிகளுக்காவும் பயிற்சி எடுத்து நடிக்க வேண்டும் என்பதில் இயக்குநர் ரொம்பவும் உதுதியாக இருந்தார். காரணம் படத்தின் ஸ்கிரிப்ட் அப்படி. அது மட்டுமா?

இந்தக் கதாபாத்திரத்தை நான் மிகச் சிறப்பாக செய்ய வேண்டும் என்பதற்காக The Blue Steel, The Bone Collector and Mardhani ஆகிய படங்களையும் பார்க்க வைத்தார். அந்தப் படங்களைப் பார்த்த பிறகு எனக்குள் ஒரு சக்தியே வந்தது என்ற உண்மையை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். இப்போது அர்த்தநாரி படத்தை முழுமையாகப் பார்த்த போது எனக்குள் வந்த அந்த சக்தி அப்படியே நிலைத்து விட்டது போலவே உணர்கிறேன்.

படத்தில் நடிக்கும்போது எனது கணுக்கால் முட்டியில் அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால் அப்போது பட யூனிட் என்மீது காட்டிய அக்கறையையும், துணிச்சலான நடிப்புகாகக் கொடுத்த பாராட்டையும் பார்த்த போது அந்த வலி பறந்தே போனது .

இப்படி கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படம் கிடைத்ததற்காக கடவுளுக்கும் இயக்குநருக்கும் என்றென்றும் நான் நன்றி சொல்ல வேண்டும் . .

சின்ன வயசிலிருந்தே நான் விஜய சாந்தியின் தீவிர ரசிகை. இந்தப் படத்தில் நான் ஏற்று நடித்திருக்கும் கேரக்டரும் நடித்திருக்கும் ஆக்க்ஷன் காட்சிகளும், விஜய சாந்தி மேடத்துக்கு அவரது ரசிகையான நான் சேர்க்கும் பெருமையாகவே இருக்கும் என்று மனப் பூர்வமாக நம்புகிறேன் ” என்கிறார் அருந்ததி.

கிருத்திகா பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஏ.எஸ்.முத்தமிழ் தயாரித்துள்ளார்.

விந்தன்

$
0
0

மாயலோகத்தில்..

Writer Vindhanவிந்தனின் இயற்பெயர் கோவிந்தன். இவர் 1916இல் செங்கல்பட்டு மாவட்டம், நாவலூர் என்கிற சிறிய ஊரில் பிறந்தார்.

வறுமையான குடும்பச் சூழ்நிலை. நடுநிலைப் பள்ளியைக் கூடத் தாண்டாத பருவத்தில், பிழைப்புக்காகத் தனது தந்தையுடன் சிறியச் சிறிய வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

சில காலம் சென்ற பின், இரவுப் பள்ளியிலும், தொடர்ந்து ஓவியக் கல்லூரியிலும் சேர்ந்து ஓவியமும் கற்கத் தலைப்பட்டார். ஆனால் வறுமை அவரைத் துரத்தியது. பாதியிலேயே விட்டுவிடும்படியாகவும் ஆகிவிட்டது.

ஓர் அச்சகத்தில் அச்சுக் கோர்க்கும் தொழிலாளியாகச் சேர்ந்தார். தொழிலை இங்கு நன்றாகக் கற்றுக் கொண்டவருக்கு சில காலத்திற்குப் பிறகு ஆனந்த விகடன் அச்சகத்தில்அச்சுக் கோர்க்கும் வேலை கிடைத்தது. விகடனில் வேலை செய்து வந்த காலத்தில், அவர்களுக்குத் தெரியாமல் சில கதைகளை எழுதி, அவைகள் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் வெளிவந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் விகடன் வேலையை விட்டு விலகிச் சென்றவருக்கு, ‘கல்கி’ நிறுவனம் கை கொடுத்தது. ‘கல்கி’யில் அச்சுக்கோப்பாளராகச் சேர்ந்தார்.

‘கல்கி’ கிருஷ்ண மூர்த்தியின் ஆதரவு இவருக்குக் கிடைத்தது. ‘கல்கி’யின் அறிவுரையின் பேரில் கோவிந்தன் என்கிற தன் பெயரை ‘விந்தன்’ என மாற்றிக் கொண்டார். ‘கல்கி’யின் ஆரம்பத்தில் சிறுவர்களுக்குக்கான பகுதியில் பல கதைகள் எழுதினார்.

விந்தனின் எழுத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி. விந்தனை ‘கல்கி’ பத்திரிகையின் துணை ஆசிரியர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். துணை ஆசிரியராக இருந்த பொழுது விந்தன் எழுதிய எழுத்துக்கள் மிகுந்த பாராட்டுதல்களைப் பெற்றன.

1946இல் தமிழ்நாட்டில் அரசாங்கத்தாரால் தமிழ் வளர்ச்சிக் கழகம் என்று ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் சிறந்த எழுத்துக்கான விருதை, இந்தக் கழகம் இந்த ஆண்டிலிருந்து வழங்க ஆரம்பித்தது. இதே ஆண்டில் வெளிவந்த விந்தனின் ‘முல்லைக்கொடியாள்’ என்கிற சிறுகதைத் தொகுப்பு இந்தப் பரிசைப் பெற்றது.

அக்காலத்தல் ‘பொன்னி’ என்றொரு இலக்கியப் பத்திரிகை புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்தது. அதில் ‘கண் திறக்குமா’? என்ற தொடர்கதையை எழுதினார்.

இதன் பிறகுதான், அப்போது வேலை பார்த்து வந்த ‘கல்கி’யில் விந்தனின் புகழ்பெற்ற நாவல் ‘பாலும் பாவையும்’ தொடராக வெளிவர ஆரம்பித்து மிகுந்த பாராட்டுதல்களைப் பெற்றது.

விந்தன் ஆக மொத்தம் ஆறு நாவல்கள் எழுதியிருக்கிறார்.

1. கண் திறக்குமா?
2. பாலும் பாவையும்
3. மனிதன் மாறவில்லை
4. காதலும் கல்யாணமும்
5. அன்பு அலறுகிறது
6. சுயம்வரம்

இவைகள் தவிர, சுமார் 90 சிறுகதைகள். சில கட்டுரைகள் எம் கே தியாகராஜபாகவதர் கதை, எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘சிறைச்சாலை சிந்தனைகள்’ என்கிற தலைப்பிலும் எழுதியுள்ளார்.

இவரது எழுத்துலக வாழ்க்கை எப்பொழுதுமே நெருக்கடிகள் மிகுந்ததாகவே இருந்திருக்கிறது. பெரியகுடும்பம். முதல் மனைவி மூலம் இரண்டு குழந்தைகளும், இரண்டாவது மனைவியிடம் ஆறு குழந்தைகளும். வாழ்க்கையைப் போராட்டத்திலேயே கழித்திருக்கிறார். ஆனாலும் அந்த வறுமையை அவர் விரும்பி ஏற்றுக் கொண்டாற்போல்தான் தோன்றுகிறது.

வாழ்க்கை வளத்தை சற்றேனும் பெருக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இவரது பார்வை திரைப்படம் பக்கமும் திரும்பியிருக்கிறது. டி.ஆர்.ராமண்ணாவின் ஆர்.ஆர்.பிக்சர்சாரின் ‘வாழப்பிறந்தவள்’ என்னும் திரைப்படம் 1953இல் வெளிவந்தது. இப்படத்திற்கு விந்தன் வசனம் எழுதினார். ‘அன்பு’ என்கிற படம் இதன் கதை வசனம் மற்றும் பாடல். இப்படத்தில் சிவாஜி-பத்மினி ஜோடி. இப்படமும் 1953இலேயே வெளிவந்தது.

1954இல் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட படம் ‘கூண்டுக்கிளி’. இதில் எம்ஜியார். சிவாஜி இருவருமே நடித்திருக்கிறார்கள். எனவே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம். இப்படத்திற்கான வசனத்தை விந்தன் எழுதியிருந்தார். அத்துடன் அருமையான சில பாடல்களும் இயற்றியிருந்தார். சரியா, தப்பா? என்கிற பாடல் மிகவும் பிரபலமாயிற்று

‘கொஞ்சம் கிளியான பெண்ணை
கூண்டுக்கிளியாக்கிவிட்டு,
கெட்டி மேளம் கொட்டுவது
சரியா, தப்பா?
காதல் செய்த குற்றம்
எனது கண்கள் செய்த குற்றமென்றால்
கண்ணைப் படைத்த கடவுள் செய்கை
சரியா, தப்பா?’

என பற்பல சரியா, தப்பா கேள்விகள் போட்டு எழுதப்பட்ட இப்பாடலை டி.எம்.சௌந்திரராஜன் வெகு அருமையாகப் பாடியிருந்தார்.

‘குலேபகாவலி’ என்றொரு பிரம்மாண்டமான படத்தைத் தயாரித்தார்கள் ஆர்.ஆர். பிக்சர்சார். இப்படம் 1955ல் வெளி வந்தது. இப்படத்திற்குச் சில பாடல்களை எழுதியிருந்தார் விந்தன். அதில் குறிப்பாக ஒரு பாடல் மாபெரும் வெற்றியடைந்து மிகவும் பிரபலமாயிற்று. இப்பாடல் இன்று வரையிலும் பல்வேறு மேடைகளில் பாடப்பட்டும் வருகிறது.

‘மயக்கும் மாலைப் பொழுதே நீ போ, போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலைத் தீர்க்க வா…’

விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசை. மெல்லிசை மன்னர்கள் என்கிற பட்டம் பின்னாளில் இவர்களுக்குக் கிடைக்க ஆதாரமாக அமைந்த மிக அருமையான பாடல்.

இதற்கிடையில் 1954இல் சொந்தமான ஒரு பத்திரிகையை ஆரம்பித்தார். ‘மனிதன்’ என்று பெயர். மிக அருமையான இதழ். இதை, வெளி வந்த காலத்திலேயே படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

இந்த மனிதன் இதழில் வெளிவந்த ‘தெருவிளக்கு’ என்னும் தொடர் அக்காலத்தில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

‘சினிமா’ ஆசை விடவில்லை. தொடர்ந்து சில படங்களுக்கு வசனம், பாடல் போன்றவை எழுதினார். இதில் மணமாலை, பார்த்திபன் கனவு, குழந்தைகள் கண்ட குடியரசு போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை.

ஒரு சமயம் பதிப்பகம் ஒன்றைச் சொந்தமாக ஆரம்பித்து நடத்தினார். ‘புத்தகப்பூங்கா’ என்று பெயர். சில நல்ல எழுத்தாளர்களின் கதைகளை நூல் வடிவில் வெளியிட்டார். அதில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான நூல் ஜெயகாந்தனின் சில கதைகள் அடங்கிய ‘ஒரு பிடி சோறு’ என்னும் நூல்.

சில காலம் ‘தினமணி கதிரில்’ வேலை பார்த்தார். அந்த வேளையில்தான் எம்.கே.தியாகராஜ பாகவதர், எம்.ஆர். ராதா போன்றோரின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார்.

விந்தன் 1975 ஜுன் மாதம் காலமானார். எழுத்துலகில் ஒரு சாபக்கேடு உண்டு. தகுதியுடைய எழுத்தாளர்கள் பலர் போதிய கவனமோ, பாராட்டுதல்களோ இல்லாமல் புறக்கணிக்கப்படுவதும், தகுதி குறைந்தவர்கள், தகுதிக்கு மேலாகப் பாராட்டப்படுவதும் காலம் காலமாக நடைபெற்று வருகிறது. இம்மாதிரி உரிய கவனமின்றி, தமிழ் இலக்கிய உலகம் புறக்கணித்து வரும் எழுத்தாளர்கள் சிலரில் விந்தனும் ஒருவர், ‘அமுதசுரபி’ இதற்கு விதிவிலக்கு!

- கிருஷ்ணன் வெங்கடாசலம்

ஜில் ஜங் ஜக் –பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்

காமெடி கவ்வும் – நலன் குமாரசாமி

$
0
0

Kaadhalum Kadanthu Pogum

சூது கவ்வும் படத்தின் கதைக்கு எதிர் திசையில் இப்படத்தின் கதையை அமைத்து அப்படத்தின் சாயல் இப்படத்தில் இல்லாதவாறு குடும்பத்தில் உள்ள அனைத்து வயதினரும் ரசிக்கும் வகையில் இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.

‘காதலும் கடந்து போகும்’ ஒரு காதல் கலந்த காமெடி படம். முழுக்க காதல் கலந்த நகைச்சுவைப் படம் என்பது தமிழ் சினிமாவில் மிகவும் அரிது. ஒன்று நகைச்சுவை அதிகமாக இருக்கும் இல்லையென்றால் காதல் கலந்த காட்சிகள் அதிகமாக இருக்கும். இப்படத்தில் இறுதிக் காட்சிகளுக்கு முன்பு வரை காட்சிகளோடு இழையோடும் நகைச்சுவை இருந்து கொண்டே இருக்கும்.

‘சத்யா’ படத்தில் நடித்த சுந்தர் இப்படத்தில் கவுன்சிலராக நடித்துள்ளார். அவரிடம் பணியாற்றும் அடியாளாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். ‘ப்ரேமம்’ படத்தில் நடித்து முடித்திருந்த நிலையில் அப்படத்தினில் ஒரு நாயகியாக நடித்திருந்த மடோனா செபஸ்டியன் இப்படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். விஜய் சேதுபதி மற்றும் மடோனா இருவருமே போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார்கள். ஒரு முறை, “என்னய்யா இந்தப் பொண்ணு இப்படி நடிக்கிறா?” என்று விஜய் சேதுபதி பாராட்டினார். போலிஸ் அதிகாரியாக வில்லன் வேடத்தில் சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். படத்தின் 70% முதல் 80% காட்சிகள் நாயகன், நாயகி சம்பந்தப்பட்டே இருக்கும்.

‘சூது கவ்வும்’ படத்தில் நயன்தாராவுக்கு கோயில் கட்டும் காமெடி காட்சிக்கு எப்படி நல்ல வரவேற்பு கிடைத்ததோ, அதே போல இப்படத்தின் காமெடி காட்சிகளுக்கும் கிடைக்கும்.

நாயகன், நாயகி இருவருக்கும் எப்படி நட்பு உருவாகிறது என்பது தான் கதையே!

நலன்தமிழ் சினிமாவில் உடனே நட்பு உருவாகி விடுவது போல பண்ணியிருப்பார்கள். ஆனால், இப்படத்தில் நட்பு வளரும் காலகட்டத்தை படிப்படியாகக் காட்டியிருக்கிறார்கள். காட்சிகளில் நகைச்சுவை கலந்து அக்காட்சிகள் மூலமாக நட்பு உருவானது என்பதை பார்ப்பவர்கள் நம்புவது போல சொல்லியிருக்கிறார்கள். இப்படத்தின் ஸ்பெஷல் என்னவென்றால் இருவருக்கும் காதல் வரும் போது படம் முடிவடைந்துவிடும். இப்படத்தில் காதல் தோல்வி எல்லாம் கிடையாது.

இப்படத்தில் 2 பாடல்கள், 2 சண்டைக் காட்சிகள் இருக்கிறது. ஒரு சண்டைக்காட்சியை ஒரே டேக்கில் எடுத்திருக்கிறார்கள். ஒரு கட்டிடத்திற்கு விஜய் சேதுபதி தனது நண்பருடன் சென்று சண்டையிட்டு விட்டு மறுபடியும் கட்டிடத்தில் இருந்து வெளியே வந்து நடந்து போவார். இதை ஒரே டேக்கில் எடுக்கப்பட்டது. இச்சண்டைக் காட்சியை ஹரி – தினேஷ் பண்ணியிருக்கிறார்கள்.

“இயல்பாக வாழ்க்கையை எதிர்கொள்ளுங்கள். காதல் அது பேசாமல் வந்துவிட்டு போகட்டும் என்பதை தான் இப்படத்தில் சொல்லியிருக்கிறேன்” என்கிறார் இயக்குநர் நலன் குமரசாமி.

அவியல் –டீசர்

எமன் –போஸ்டர்

$
0
0

விஜய் ஆண்டனியின் எமன்

இயக்குநர் வெற்றிமாறன் தொடங்கி வைத்தார்.


சேது பூமி விமர்சனம்

$
0
0

Sethu Boomi vimarsanam

மறவர் குலத்தைச் சேர்ந்த குமரனைக் கொல்ல முயல்கின்றனர். அவனது காதலி புது மலரின் தாய் மாமனைக் கொன்று விடுகின்றனர். அதனாலெழும் சிக்கல்களைச் சமாளித்து நாயகன் குற்றவாளியை எப்படிக் கண்டுபிடிக்கிறான் என்பதுதான் படத்தின் கதை.

படத்தின் தலைப்பைக் கொண்டே படம் நடக்கும் களம் ராமநாதபுரம் என யூகிக்கலாம். வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் முத்துராமலிங்கத் தேவரை வழிபட உதவியதே அன்றி, களம் கதைக்கு உதவவில்லை. சம்பிரதாயமான முறையில் கதாபாத்திர அறிமுகங்கள் முடிந்தும், படத்தின் முதற்பாதி இலக்கற்றே பயணிக்கிறது. நாயகன், நாயகிக்கிடையேயான காதல் காட்சிகளில் இன்னும் சுவாரசியத்தைக் கூட்டியிருக்கலாம்.

Kenthiran Muniasamiசாமி எனும் கதாபாத்திரம் வீழ்ந்ததும் படம் சூடு பிடித்து ஓடத் துவங்குகிறது. நாயகனுக்கு இணையான சாமி எனும் கதாபாத்திரத்தில் படத்தின் இயக்குநர் கேந்திரன் முனியசாமியே நடித்துள்ளார். ‘நீ துரியோதனன் பக்கமிருக்கும் கர்ணன் மாதிரிய்யா’ என வசனங்களிலேயே அவரது குணவார்ப்பு படத்தில் விவரிக்கப்படுகிறது.

புது மலராக சமஸ்க்ருதி நடித்துள்ளார். மருளும் பொழுதும், சில கோணங்களிலும் அனன்யாவை ஞாபகப்படுத்துகிறார். காதலா அல்லது பாசத்தால் உருவான பிடிவாதமா என்ற தவிப்பை சமஸ்க்ருதி தன் கண்களில் கொண்டு வந்து பார்வையாளர்களுக்குக் கடத்தி விடுகிறார். தந்தையின் மீது புது மலர் வைத்திருக்கும் அளவிட முடியாப் பாசத்தை அழகாகப் பிரதிபலிக்கார் சமஸ்க்ருதி. அவரது தந்தையாக நடித்தவர் ஒத்துழைத்திருந்தால், அக்காட்சிகள் மேலும் மெருகேறி இருக்கும்.

குமரனாக தமன் குமார். படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை படம் நெடுகே தமன்.. தமன் மட்டுமே! சாமியைப் போல் குமரனுக்கும் பிரத்தியேக குணவார்ப்பினை இயக்குநர் அளிக்காதது பெருங்குறை. எனினும் நாயகியுடனான காதல் காட்சிகள், கிச்சுகிச்சு மூட்டி ஓயாமல் பேசிக் கொண்டிருக்கும் சிங்கம் புலியைச் சமாளிப்பதென படம் நெடுகே தன்னிருப்பை அழுத்தமாகப் பதிக்கிறார். படத்தின் க்ளைமேக்ஸில் அவர் பேசும் வசனம் மிக முக்கியமானது.

தொட்டால் தொடரும் படத்தில் பார்த்ததை விட எடை கூடி, அதிரடி சண்டைக் காட்சிகளுக்குத் தயாரென்பது போல் கிண்ணென்று இருக்கிறார். அதே போல் படத்தில் வரும் இரண்டு சண்டைக் காட்சிகளிலும் ஈர்க்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர் நாக்-அவுட் நந்தாவின் சண்டைக் காட்சிகள் ஆர்ப்பாட்டமின்றி ‘நச்’சென்றுள்ளது.

சேது பூமியை திரையில் காட்டியதுமே அங்கே நிலவும் மத நல்லிணக்கத்தைச் சித்தரிக்கிறார் இயக்குநர். இந்துவாய் வரும் K.S.G. வெங்கடேஷ்க்கும், முஸ்லிமாய் வரும் ஜூனியர் பாலையாவுக்கும் இடையேயான நட்பு ஆழமானதாய் உள்ளது. இன்ஸ்பெக்டராக வரும் ராஜலிங்கம், அந்தக் கதாபாத்திரத்திற்கு அருமையான தேர்வு. சேரன் ராஜ்க்கென்றே தனித்துவமான உடல்மொழி உள்ளது. ஆனால் இப்படத்தில் ஏனோ மலையாள நடிகர் லாலின் (சண்டக்கோழி வில்லன்) உடல்மொழியைக் கையாண்டுள்ளார்.

மண்ணின் மனம் கமழ, அழுத்தமாக தன் கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் உருவாக்கத் தவறியுள்ளார் இயக்குநர். எனினும் படத்தின் இரண்டாம் பாதி அக்குறையைப் போக்கி விடுவது ஆறுதல்.

சேது பூமி – பாச பூமி.

நாளை முதல் குடிக்க மாட்டேன் விமர்சனம்

$
0
0

Naalai Muthal Kudikka Matten Vimarsanam

எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்வார் இங்கிலீஷ் டீச்சர் மலர், ஆனா குடிக்காரர்களை மட்டும் எந்த ஜென்மத்துக்கும் மன்னிக்கவே மாட்டார். தனக்குக் குடிப்பழக்கம் உள்ளதை மறைத்து, மலரைக் காதலித்து மணம் புரிந்து கொள்கிறார் தமிழாசிரியர் அ.சிவக்குமார். பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை.

‘உள்ளொற்றி உள்ளுர்..’ எனத் தொடங்கும் குறளில் இருந்து படம் தொடங்குகிறது. நாயகனின் குணத்தை விளக்க இக்குறளை உபயோகப்படுத்தியுள்ளனர். சின்னஞ்சிறு பட்ஜெட் படம். இயக்குநர் அண்ணன் செந்தில்தல்ராஜாவுக்காக அவரது M.G.ராஜாவே தயாரித்துள்ளார். முடிந்தளவு இழுத்துப் பிடித்துப் படத்தை எடுத்துள்ளது ஆரம்பம் முதலே பட்டவர்த்தணமாய்த் தெரிகிறது. எளிமையில் சுவாரசியத்துக்கு முனைந்துள்ளனர்.

கட்டுக்கோப்பான திரைக்கதை இல்லையெனினும், நாயகனாக நடித்திருக்கும் ராஜ் ஒற்றை ஆளாகப் படத்தைச் சுமக்கிறார். தமிழாசிரியராக நடித்திருக்கும் அவரது முழியும், மைண்ட்-வாய்ஸுமே படத்தின் பலம். குடிப்போதையில் பக்கத்து வீட்டுக்குச் சென்று உதை வாங்கும் காந்தராஜ், படத்தின் கலகலப்புக்கு உதவப் பார்க்கிறார். எனினும் கோர்வையின்மையும், அசுவாரசியமும் அதற்கு உதவவில்லை. படத்தின் நீளத்தை படத்தொகுப்பாளர் ராஜ் கீர்த்தி கட்டுத் தெறித்தாற்போல் நறுக்கி விறுவிறுப்பைக் கூட்டியிருக்கலாம்.

குடி எத்தனை வகைப்படும்?

பன்னிரெண்டு வகைப்படுமென நாயகனுக்கு ஒரு நாட்டு வைத்தியர் விளக்குகிறார். திரையரங்கில் பலத்த கரகோஷம் பெறுகின்றது. உதாரணத்திற்கு, இரண்டு வகையைப் பார்ப்போம். காரணக்குடி – குடிக்கணுமென முடிவு செய்து அதற்குக் காரணத்தைத் தேடிக் கண்டுபிடித்துக் குடிப்பது; கம்பெனி குடி – சாகத் தனியாகப் போனாலும் போவார்களேயன்றி குடிக்கப் போகும்பொழுது தனியாகப் போகாமல் கம்பெனி தேடுவது. ஜாலி, தனி, நாகரீகம், ஒண்டி, ஓசி, காரியம், மோடா என ஒவ்வொரு வகையையும் மிக விரிவாக அலசி வயிற்றைப் பதம் பார்க்கின்றனர்.

சமர்த்தினியும் பனிமதியும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குடிப்பழக்கமுள்ள கணவர்களை நினைத்துக் கவலையுறுபவர்கள். பாதிக்கப்பட்ட எண்ணற்றோரின் குரலாக உள்ளனர் இவ்விருவரும்.

படத்தில் வரும் நாயகியின் ஃப்ளாஷ்-பேக் காட்சியில், குடியின் தீமையை மிக அழகாகச் சித்தரித்துள்ளனர். ஒரு குடும்பத் தலைவனின் குடி வெறியால். அந்தக் குடும்பம் எப்படி சின்னாபின்னமாகிறது என்பதும், அந்த வீட்டுச் சிறுமியின் நிலைமையும் மனதைக் கனக்க வைக்கிறது. அச்சிறுமியைத் தனியாக பொட்டல்வெளியில் நடக்கவிட்டு, ‘முதல் முதல் கேட்ட பாட்டு அம்மாவின் தாலாட்டு’ என்ற பாடலை ஒலிக்க விடுகின்றனர். பாடியவர் பாடலுக்கு உயிரைக் கொடுத்துள்ளார். அதே போல், ‘அடி மேல அடி விழுந்தாஅம்மி அது தாங்கும், இடி மேல் இடி விழுந்தா நெஞ்சம் தாங்குமா?’ என்ற பாடலையும் சொல்லலாம். சிவசுப்பிரமணியனின் பின்னணி இசையை விட பாடல்கள் கவருகிறது. ‘இப்பவே இப்பவே செத்துப் போறேன்டி’ எனும் பாடலை முன்பே கேட்டது போலிருந்தாலும் ரசிக்க முடிகிறது.

குடிப்பழக்கத்திற்கு எதிராக வலுவான குரலை எழுப்பிய ‘திறந்திடு சீசே’ படமளவு இப்படம் குரலெழுப்பவில்லையெனினும், குடியினால் ஏற்படக்கூடிய தீமைகளை விளையாட்டுத்தனமாய்ச் சொல்லியுள்ளது.

உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்

ஹார்வார்ட் தமிழ் இருக்கை –தள்ளிப்போகாதே, தள்ளிப்போடாதே!

$
0
0

Harvard Tamil Chair

ஹார்வார்ட் தமிழ் இருக்கையை வாழ்த்தி கவிஞர் தாமரை எனக்கு ஒரு கடிதம் எழுதியதுடன் ஹார்வார்ட் தமிழ் இருக்கைக்கு ஒரு லட்சம் ரூபா நிதியுதவியும் அளித்திருக்கிறார். அவர் எழுதிய மடல் இதுதான்.

அன்புள்ள அ.முத்துலிங்கம் ஐயா அவர்களுக்கு,

வணக்கம். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் ‘தமிழ் இருக்கை’ பற்றி நான் ஏற்கெனவே அறிந்திருந்த போதிலும், உங்களுடனான தொலைபேசி உரையாடலில் கூடுதலாகத் தெரிந்து கொண்டேன். தாங்கள் இதற்காக அமைக்கப் பட்டிருக்கும் குழுவில் ஒருவர் என்பதறிந்து மிகுந்த மகிழ்ச்சி கொண்டேன்.

முதன்முதலாக இது பற்றித் தெரியவந்த போது எனக்கு ஏற்பட்ட முதல் எண்ணம், ‘ தமிழர்கள் நாம் எப்போது பார்த்தாலும் தமிழ்ப் பெருமை பேசித் திரிகிறோம், ஆனால் இப்போதுதான் ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமைப்பது பற்றி யோசிக்கிறோம், ஏன் இந்த எண்ணம் முதலிலேயே தோன்றவில்லை?’ என்பதுதான். எப்படியோ திருமிகு வைதேகி ஹெர்பர்ட் அவர்களின் பாராட்டு விழாவில் இதற்கான விதை ஊன்றப்பட்டு, இதோ இப்போது செடி தழைத்தோங்கத் தொடங்கி விட்டது.

திரைப்படப் பாடல்களில் ஆங்கிலம் கோலோச்சிய காலத்தில் தமிழால் முடியும் என்று காட்டுவதற்காகவே நான் முனைந்து நின்றேன் என்பதால், ஹார்வர்டில் தமிழ் இருக்கை பற்றிய செய்தி எனக்கு எத்தனை உவகை அளித்திருக்கும் என்று விவரிக்கத் தேவையில்லை. இதற்காக ஆகும் ஆறு மில்லியன் செலவில் முதல் ஒரு மில்லியன் டாலர்கள் செலுத்தித் துவங்கி வைத்திருக்கும் மருத்துவர் ஜானகிராமன் அவர்களுக்கும் அவரது நண்பர் திரு. திருஞானசம்பந்தம் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஹார்வார்ட் தமிழ் இருக்கை

ஏன் உலகத்துத் தமிழ்ச் செல்வந்தர்கள் மட்டும் செலுத்தி இருக்கையைத் துவங்கக் கூடாது என்ற நியாயமான கேள்விக்கு உங்கள் பதில் அதைவிட நியாயமானது. இத்தகைய பெருமைமிகு செயலுக்குத் தமிழர்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதே அது!

என் தாயார் வெ.வெ. கண்ணம்மாள் தமிழ் ஆசிரியர், (மறைந்த) என் தந்தையார் சு.ஆ. சுப்பிரமணியன் தமிழ்க் கவிஞர். தமிழ்ப் பற்றின் காரணமாகவே எனக்கும் என் அண்ணன், தங்கைக்கும் பெயர்கள் சூட்டினார்கள் ‘பூங்குன்றன், தாமரை, மல்லிகை’ என்று! எங்கள் குடும்பமே தமிழ்க் குடும்பம். தமிழ்வழிக் கல்வி, தமிழ் வழிபாடு, தமிழ்வழிச் சடங்குகள் என்று பயின்று வந்தோம், உச்சக்கட்டமாக, பொறியாளராகிய நான் தமிழ்ப் பாடல்கள் என்று தமிழ்த் திரைப்படத்திற்குள் நுழைந்தது காலம் இட்ட கட்டளை என்றே தோன்றுகிறது. என் தந்தையார் இப்போது இருந்திருந்தால் இந்தப் பணியை சிரமேற் கொண்டிருப்பார் என்பதில் ஐயமில்லை.

எங்கள் குடும்பத்தின் பெயரால் நாங்கள் அளிக்கும் சிறு தொகையான ரூ ஒரு இலட்சத்தைப் (1,00,000/-) பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன். நீங்கள் கேட்டுக் கொண்டபடி என் ரசிகர்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இந்தச் செய்தியை நீங்கள் எந்த விதத்திலும் உலகத் தமிழர்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கலாம்.

“தமிழர்களே வருக, தமிழ் இருக்கை தருக”.

ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை மலர்ந்தது என்ற செய்தி விரைவில் வந்து காதில் தேன் பாய்ச்சக் காத்திருக்கிறேன்.

அன்பும் வாழ்த்துகளும்!

தங்கள் உண்மையுள்ள,

- தாமரை

கவிஞர் தாமரையின் சமீபத்திய தள்ளிப்போகாதே பாடல் மிகப் பிரபல்யமானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தது. நான் பலமுறை கேட்ட பாடல். இன்று இணையம் வழியாக 7,562,894 பேரைச் சென்றடைந்திருக்கிறது என்று உத்தியோகபூர்வமான தகவல் சொல்கிறது. பாடலைக் கேளுங்கள்.

இவர்கள் ஆளுக்கு ஒரேயொரு டொலர் கொடுத்தால் ஹார்வார்ட் தமிழ் இருக்கை நாளைக்கே உருவாகிவிடும்.

SIX EASY STEPS TO PAY UNDER CROWD FUNDING

1. Double click on this link https://www.generosity.com/…/harvard-university-s…/x/3630269
2. DONATE NOW – click
3. Change 50 to 70 or 100 or 500 or any amount and go down and click CONTINUE PAYMENT
4. In the BOX given write your email and click CONTINUE PAYMENT
5. Enter your name as it appears in your card, card number, expiry date, 3 digit number that is on the back of your card.
6.Give billing address, city, state, zip code and click SUBMIT PAYMENT

தமிழ் பற்றாளர்களே இன்றே நிதி வழங்குங்கள்
தள்ளிப்போகாதே, தள்ளிப்போடாதே

- அ. முத்துலிங்கம்

ஹார்வார்ட் தமிழ் இருக்கை –கவிஞர் தாமரையின் பங்களிப்பும் வேண்டுகோளும்

$
0
0

கவிஞர் தாமரை

உலகப்புகழ் பெற்ற ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்று அமைய இருக்கிறது. தமிழ் தொடர்பான உருப்படியான வேலை என்றால் அது இதுதான்.

தமிழ் இருக்கை என்றால் என்ன? எதற்காக அது அமைக்கப்பட வேண்டும்?

உலகெங்கும் சுமார் 10 கோடித் தமிழர்கள் உள்ளோம். உலகின் பெரிய இருபது மொழிகளில் தமிழும் அடக்கம். உலகின் ஆறு செம்மொழிகளில் தமிழும் ஒன்று. எனினும் உலக அளவில் தமிழ்மொழிக்கான அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை. பன்னாட்டு ஆய்வாளர்களைக் கவர முடியாமையும், அதனால் உலகத்தரம் வாய்ந்த ஆய்வுகள் போதிய அளவில் மேற்கொள்ளப்படாமையும் இதற்கான காரணங்களில் அடங்கும்.

நமது பண்டைத்தமிழ் இலக்கியங்கள், உலக அங்கீகாரம் பெற்ற பிறமொழி இலக்கியங்களுக்கு நிகராக வெவ்வேறு கோணங்களில் ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியம்.

பன்னாட்டு அளவில் முதன்மையான பல்கலைக்கழகங்களில் தமிழைக் கற்கவும் ஆய்வு செய்யவும் வாய்ப்பு ஏற்படும் போது இந்தப் போதாமைகள் சீர் செய்யப்படும். ஓர் உலகப் பல்கலையில் இதற்கான துறை அமையும் போது, அதற்குத் ‘தமிழ் இருக்கை‘ என்று பெயர். இந்த அடிப்படையில் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட உள்ள தமிழ் இருக்கையின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம்.

ஹார்வார்ட் பல்கலைக்கழகம் எங்குள்ளது? அதன் சிறப்பென்ன?

ஐக்கிய அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்தில் 1636 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உலகின் முன்னோடி பல்கலைக்கழகம் ஹார்வார்ட். உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் உலகத்தர வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இங்கு இல்லாத துறைகளே இல்லை எனலாம். ஆராய்ச்சிகளுக்கு எல்லை என்பதும் இல்லை.

இங்கு மேற்கொள்ளப்பட்டு, நிரூபிக்கப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளை ஹார்வார்ட் பல்கலைக்கழகம் வெளியிடும்போது அவற்றை உலக சமுதாயம் ஒரு மனதாக ஏற்றுக் கொள்வது வரலாறு. இப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள், பயிற்றுவித்த ஆசிரியர்கள் என 47 பேர் கடந்த நூற்றாண்டுகளில் நோபல் பரிசு பெற்றிருக்கிறார்கள் என்றால் அதன் அறிவுச்சாரத்தைப் புரிந்து கொள்ளலாம்.

தமிழ் இருக்கை அமைய என்ன செய்ய வேண்டும்?

இந்த இருக்கை அமைய ஆறு மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ 40 கோடி) தேவைப்படுகிறது. இந்தத் தொகையில் முதல் ஒரு மில்லியன் டாலர்களை அமெரிக்கத் தமிழர்களாகிய மருத்துவர்கள் ஜானகிராமனும் திரு. திருஞான சம்பந்தமும் அளித்துத் துவக்கி வைத்திருக்கிறார்கள். மீதமுள்ள தொகையை உலகெங்கும் உள்ள தமிழர்களிடமிருந்து நன்கொடையாகப் பெற முடிவு செய்யப் பட்டுள்ளது.

ஏன் உலகத் தமிழ்ச் செல்வந்தர்களிடமிருந்தே பெறக்கூடாது?

பெருமைமிக்க இந்த இருக்கை அமையும்போது அதற்கான பங்களிப்பு உலகத்தின் அனைத்துத் தரப்புத் தமிழர்களிடமிருந்தும் வரவேண்டும், அனைவருக்கும் இந்த இருக்கையில் ஒரு பங்கு இருக்க வேண்டும் என்ற மேலான நோக்கமே, அனைவரும் நிதி தருக என்று அழைப்பு விடுப்பதன் நோக்கம்.

யார் இதற்குப் பொறுப்பாளர்கள்?

”தமிழ் இருக்கை இங்க்“ ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இலாப நோக்கமற்ற இந்நிறுவனம், இருக்கை தொடர்பான அனைத்துப் பணிகளையும் மேற்கொள்கிறது. இதை முதல் நன்கொடையாளர்கள் மருத்துவர்கள் ஜானகிராமன், திருஞானசம்பந்தம், புகழ்பெற்ற எழுத்தாளர் அ.முத்துலிங்கம், திருமிகு வைதேகி ஹெர்பர்ட் ஆகியோர் அடங்கிய ஆட்சிக்குழு நிர்வகிக்கிறது.

வைதேகி ஹெர்பர்ட் அவர்கள்தாம் சங்கநூல்கள் பதினெட்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். இவரைப் பாராட்ட எடுக்கப்பட்ட விழாவில்தான் தமிழ் இருக்கை பற்றிப் பேசி முடிவு எடுக்கப் பட்டது.

எப்படி நிதி அனுப்புவது? குறைந்த பட்சம் எவ்வளவு அனுப்ப வேண்டும் ?

நிதியை நேரடியாக இணையம் மூலம் ஹார்வார்ட் தமிழ் இருக்கைக்கே அனுப்பலாம். இதற்கான முகவரியும், நிதி அனுப்பும் வழிமுறையையும், கீழே நான் பகிர்ந்துள்ள எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் பதிவில் உள்ளது.

ஹார்வார்ட் தமிழ் இருக்கை – தள்ளிப்போகாதே, தள்ளிப்போடாதே!

இணையம் பயன்படுத்தி அனுப்பத் தெரிந்தவர்கள் அப்படியே அனுப்பலாம். (என் போன்ற பாமரர்கள் காசோலை, அல்லது வேறு வழிகளில் அனுப்பலாமா என்று கேட்டிருக்கிறேன். நம் சந்தேகங்களை அ.முத்துலிங்கம் ஐயா அவர்களிடமே வினவலாம். அவரது மின்னஞ்சல் முகவரி : appamuttu@gmail.com.

மேலும் இங்கே சென்னையில் உள்ள அன்பர் ஆர். ஐயாதுரை அவர்களும் உதவுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது எண் : 9884021221

பலருக்கும் மனமிருக்கும், பணமிருக்காது. அதற்காகக் கவலை வேண்டாம். அனைவரின் பங்களிப்பும் அவசியம். எவ்வளவு வேண்டுமானாலும் அனுப்பலாம். குறைந்த பட்சம் ரூ. 100/- என்று வைத்துக் கொள்வோமே! அவரவர் வசதிக்கு ஏற்ற தொகை!

நான் என் பங்காக, என் குடும்பத்தின் சார்பில் ஒரு இலட்சம் (1,00,000/) ரூபாய் அனுப்புகிறேன். என் தந்தையாரின் நினைவு நாள் இந்த மாதம் வருகிறது. அதை இங்கே நினைவு கூர்கிறேன். அந்த நாளின் நிகழ்வுகளுக்காக ஏற்பாடு செய்திருந்த தொகையை இதற்குத் தருகிறேன். என் தாயாரும் ‘அப்படியே செய்’ என்று சொன்னார்கள். என் அண்ணன், தங்கை இருவரும் தந்தையாரின் நினைவாக இதைச் செய்யலாம் என்று உடனே சம்மதம் தெரிவித்தார்கள். ஈடுசெய்ய முடியாத எங்கள் இழப்பிற்கு இது ஒத்தடம் தருவதாக இருக்கிறது.

 - கவிஞர் தாமரை

நாயகி –டீசர்

Viewing all 1647 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>